ஐ டெக்கில் ஓடும் வரதராஜனின் தேர்- படக்காட்சிகள்





இன்று காஞ்சிபுரத்தில் 10.6.2009 வரதராஜ சுவாமிகளின் ?!!!! தேர்த்திருவிழா....

இழுக்க ஆளில்லை....

பெரிய தேர்..

இரும்பு சக்கரங்கள்

ஹைடிராலிக் பிரேக்

தள்ளு இயந்திரங்கள்... நவீன விஞ்ஞான துணையோடு வலம் வந்தார் வரதராஜர்.

மக்களை ஏமாற்ற.........................

திருவிழாக்கள் . இதில் பல வகை

தேர்த்திருவிழா

தேர்தல் திருவிழா..

மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சு என்பார் மார்க்ஸ்.

அன்றிலிருந்து இன்று வரை மக்களின் மீதான ஒடுக்குமுறையின் வடிகாலாகத்தான்  மதம்...

திருவிழா.சடங்கு,கோவில், பூசை,சாங்கியம்,ஜோசியம், கீழ்/மேல் லோகங்கள், புனிதம், தீட்டு, சாதி இத்தியாதிகள்....

அடிமை தனத்தை நிலை நிறுத்த இன்று

நவீன தொழில் நுட்பம் தேவை.

ஆன் லைன் பூசைகள், தரிசனம்..

ஆன்மீகம் நவீன முகத்துடன், இறையியலின் வேட்த்தை தாங்கி வருகிறது.

சங்கராச்சாரி நடத்தும் சங்கரா சேனல்

திருப்பதி தேவஸ்தானம் நட்த்தும் சேனல் ஆகட்டும் நோக்கம் ஒன்றே.

மக்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். தம்மீது கட்டப்பட்டுள்ள சங்கிலிகளை உடைக்க முயற்சிக்கக்கூடாது.

பெரியார் சொல்லுவார்.

இந்துமத்த்தின் அடிப்படையே சாதி.

சாதியின் அடிப்படை பிரிவினை...தீண்டாமை...

சாதியைக் காப்பாற்ற கடவுள்

திருவிழா

ஊடகம்

தொழில் நுட்பம்

இணையம்  என்று நீள்கிறது.

சாதியின் படிநிலைகளை கட்டிக்காக்கும் கடவுள்.

பாருங்கள்

தேரின் உச்சியில் பார்ப்பான்....

அவன் கையில் பச்சைக்கொடி

தேரை நட்த்தும் அதிகாரம் தகுதி அவன் கையில்...

தேர்தல் நட்த்துவது..

உச்ச நீதிமன்றம்

ஐஐடி... உயர் கல்வி..

அரசதிகாரம் எல்லாம் அவன் கையில்.

 

.ஒன்று

கட்சியாக

தேர்தல் திருவிழாவும்

தேர்த் திருவிழாவும்

மக்களின் வாழ்க்கையை மாற்றப்போவதில்லை.

2 comments:

Anonymous said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

Anonymous said...

கடைசியில அந்த மிசினில தான் சாமியை ஏத்தணும்.

Post a Comment