


தற்போது வந்து பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் படம் உன்னைப் போல் ஒருவனில் இருந்து ரோஜா வரை சமூகம் பாதித்துள்ள பயங்கரவாதத்தையே முன்னிலைப்படுத்துகிறது.
இவர்கள் காட்டும் பயங்கரவாதம் அல் உமா, அல்கெய்தா, ஒசாமா பின்லேடன் என்று இஸ்லாமிய பயங்கரவாதத்தையே கருப்பொருளாக பேசுகிறது. நம்மை பேசவைக்கிறது.
இதில் தற்போது கமல் மோகன்லால் நடித்து ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‘உன்னைப்போல் ஒருவன்” படத்திலும் பயங்கர? வாதத்தையே பேசுகிறது. உயர் தொழில் நுட்பம்,பல கோடி செலவீடு, பன்மொழியில் வெளியீடு... விளம்பரம்... சுருதி ஆசன் இசை என்று ஸ்டார் வேல்யு படத்தை தந்திருக்கிறார்கள். இப்படம் இந்தியாவை ஆட்டிவைப்பது அதுவும் பயங்கரவாதத்தில் இஸ்லாமிய மதத்தையே நோக்கி தாக்குதல் வழக்கம் போல தொடுத்து இருக்கிறது.
அதாவது பயங்கரவாதம் என்றால் முஸ்லிம் (கொச்சையாக சொல்ல வேண்டுமானால் துலுக்கன் அப்படித்தான் என்ற முத்திரை ). அமெரிக்க முன்னிலைப்படுத்திய பயங்கரவாத்த்தின் விளைவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தி திரைப்பட நடிகர் சாருகான் போன்றோர் அமெரிக்க நிறுவனத்தால் அவமானப்படுத்தப்பட்டது நினைவு கூற வேண்டும்.
ரோஜா, அரண்,மஜ்ஜுனு,வாரணம் ஆயிரம்,உன்னைப்போல ஒருவன் போன்ற படங்களைச் சொல்லலாம். நினைவுக்கு வராத்தால் கண்டிப்பாக நீண்ட படவரிசை இதில் விடுபட்டு இருக்கும்.
இந்திய இறையாண்மையை காக்க, மூவர்ண கொடியைக்காக்க கண்டிப்பாக தீவிரவாதியை அதுவும் முஸ்லிம் தீவிரவாதி காட்டினால் தான் அப்படம் முழுமையடையும்.
அல் உமா, அல்கெய்தா, ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கர வாத சொற்களை அடிக்கடி பயன்படுத்தவேண்டும். மீசை இல்லாமல் தாடிவைத்து இருப்பார்கள். தர்காகளின் பின்னனியில் தொழுகையும் நெட்வொர்க் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்று காட்சி அமைப்புகள் ஓடும். ஆர்டிஎக்ஸ்? பாம் வெடிக்கையில் குழந்தைகள் பெண்களின் உடல் சிதரும். இஸ்லாமிய தீவிரவாதிகள் சிரிப்பார்கள்.இந்தியாவை கேவலப்படுத்துவார்கள்.
ஆனால் உன்மை...
பயங்கரவாதத்தை ஒரு மதத்தில் அதுவும் இஸ்லாமிய மதத்தில் போய் நிறுத்திவிடுகிறார்கள். இந்துமத பயங்கரம், அரச பயங்கரவாதம் முற்றிலும் மறைக்கப்பட்டுவிட்டது.
மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருக்கிறதோ இல்லையோ தீண்டாமை இல்லாத கிராமங்கள் இல்லை.
சாதியின் பயங்கரவாதம் எங்கே ?
பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடும் பயங்கரம் எங்கே ?
தனியார்மய பயங்கரம்?
பட்டினி தற்கொலைகள்?
சுற்றுச்சூழல் கொள்ளையிடும் நவீன நடவடிக்கைகள் பயங்கரம் இல்லையா ?
பக்கத்தில் நடைபெறும் சிங்கள அரசின் இன அழிப்பு பயங்கரம் கலை இலக்கியத்தில் இடமில்லையா ?
மோடி நடத்திய குஜராத் படுகொலை ...
நாகாலாந்து படுகொலை...
கருப்புச்சட்டங்களின் மனித உரிமை மீறல்கள்?
போன்ற அத்திமீறல்கள் பயங்கரவாதமில்லையா ?
பக்கத்தில் ஈழத்தில் நடந்த அரச பயங்கரம் இவர்களுக்கு தெரிவதில்லை.
ஆனால் பேசுவார்கள்
புலிகளின் பயங்கரம் ?.....
சயனைடு குப்பிகளைப்பற்றி... என்று இவர்களின் எல்லை சுறுங்கிபோய்விடும்.
அரச பயங்கரம், அத்துமீறல் எல்லாநாடுகளிலும் இருக்கிறது.
ஆனால் சினிமா போன்ற ஊடகங்களில் இவற்றுக்கு எல்லாம் இடமில்லை.
எனென்றால் அது அரசாட்சி. அரசு நிர்வாகம் என்று ஊடகங்கள் பதில் சொல்லும்.
ஒவ்வொரு கலை இலக்கிய நிகழ்விலும் தெரிந்தோ தெரியாமலோ அரசியலை சொல்கிறது. அதற்கு ஒரு நலன் இருக்கிறது.
மணிரத்தினம் முதற்கொண்டு கமல்வரை இவர்களின் சமூகப்பார்வை தாடிவைத்த தீவிரவாதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் வரை தமிழ் திரைக்கு சிகரங்கள் எட்டாதவையே.
2 comments:
எல்லாம் சரிங்க!
உங்க ப்ளாக்ல, அளவுக்கு அதிகமா இருக்கிற விட்ஜெட்டெல்லாத்தையும எடுத்து விடுங்களேன்! கனநேரமாகியும் பேஜ் லோட் ஆகமாட்டேங்குது!
நிச்சயமாக........ஈழத் தமிழனையும் ஒரு தீவிரவாதியா காட்டுவானுக இந்த மடப்பயல்கள்...
Post a Comment